செய்திகள்

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொது இடங்களில் இலவச வைஃபை (Wi-Fi) பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறான வைஃபை பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்றும், அவ்வாறு தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதனால் பொது இடங்களில் இலவச வைஃபையை பயன்படுத்தி இணையத்தளங்களில் உலாவுவது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-(3)