சம்பந்தனின் உடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனின் உடல் இன்று (03) பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர் மண்டபத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (04) திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.
-(3)