செய்திகள்

வடகொரியா விவகாரத்தில் உலக நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்- பாப்பரசர் வேண்டுகோள்

வடகொரியாவின் அணுவாயு நடவடிக்கைகளால் அந்த நாட்டிற்கும் அமெரி;க்காவிற்ம் இடையில் உருவாகியுள்ள பதட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச தலைவர்கள் மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் தனது பயணத்தின் நிறைவில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும் பாப்பரசர் எச்சரித்துள்ளார்
இராஜதந்திர தீர்வை நோக்கி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
உலகின் பல நாடுகள் மத்தியஸ்தம் செய்வதற்கு தயாராகவுள்ளன என தெரிவித்துள்ள அவர் நோர்வேயை சுட்டிக்காட்டியுள்ளார்.