செய்திகள்

அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
பழைய முறையில் அந்த தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அரசாங்கம் அது தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றத்தில் இந்த வருட இறுதியில் நிறைவேற்றவும் அதனை தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைளை தற்போது முதலே அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)