அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்
வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
சாத்துமணி, பத்மா தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.