ஆபாசப் படங்கள் வைத்திருந்த இரத்தினபுரி வாசிக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நேற்று 50 ஆயிரம் ரூபா தண்டம்
கையடக்கத்தொலைபேசியில் ஆபாசப் படங்கள் வைத்திருந்த இரத்தினபுரி வாசிக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நேற்று 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.
கடந்த 16 ஆம் திகதி கொடிகாமம் நகரப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இளைஞரைக் கொடிகாமம் பொலிஸார் பிடித்து விசாரணை செய்தபோது, தான் ஒருவரை விரும்பியுள்ளதா கவும் அவரைச் சந்திக்கவே இங்கு வந்துள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இவரைப் பொலிஸார் சோதனையிட்டபோது அலைபேசியில் ஆபாசப் படங்கள் காணப்பட்டன. அவரைக் கைது செய்த பொலிஸார் மறுநாள் நீதிவானிடம் முற்படுத் தினர். இந்த நபரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது(15).