செய்திகள்

ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம்

கையடக்கத்தொலைபேசி­யில் ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார்.
கடந்த 16 ஆம் திகதி கொடி­கா­மம் நக­ரப் பகு­தி­யில் சந்­தே­கத்­துக்கு இட­மான முறை­யில் நட­மா­டிய இளை­ஞ­ரைக் கொடி­கா­மம் பொலி­ஸார் பிடித்து விசா­ரணை செய்­த­போது, தான் ஒரு­வரை விரும்­பி­யுள்­ளதா­ க­வும் அவ­ரைச் சந்­திக்­கவே இங்கு வந்­துள்­ள­தா­க­வும் அந்த நபர் தெரி­வித்­துள்­ளார்.
இவ­ரைப் பொலி­ஸார் சோத­னை­யிட்­ட­போது அலை­பே­சி­யில் ஆபா­சப் படங்­கள் காணப்­பட்­டன. அவ­ரைக் கைது செய்த பொலி­ஸார் மறு­நாள் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத் தி­னர். இந்த நபரை நேற்று வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.
இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது குறித்த நபர் குற்­றத்தை ஒப்­புக் கொண்­ட­தை­ய­டுத்து 50 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது(15).