செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1683 பேர் இது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன் 7 பேர் கடற்படையினராகும்.
இதன்படி தற்போது வரையில் 849 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். -(3)