செய்திகள்

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அறிவித்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை திட்டமிட்டப்படி இந்த மாதத்தில் நடத்த முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றையொன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட் சபை இது தொடர்பாக தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் திட்டமிட்டப்படி இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகளை இந்த மாதத்தில் நடத்த முடியாதுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இரைடயே 3 ஒருநாள் போட்டிகளும் , 3 ரி-20 போட்டிகளையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அதனை நடத்த முடியாதுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த போட்டிகளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியுமா என்பது தொடரல்பாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)