செய்திகள்

ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதை தவிர்த்து மக்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்-தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமல் அறிவுரை

தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் சிலரின் அறிக்கைகளை பார்த்தேன்.அதில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர அவற்றில் வேறெதுவும் இல்லை.மேலும் எமது மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாம்தர அரசியலை தவிர, வேறு என்ன ஆக்கப்பூர்வமாக விடயத்தை செய்துள்ளீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.எனவே, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொண்டு மக்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்” என நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)