செய்திகள்

எழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்கினேஸ்வரன் தலமையில் எழுக தமிழ் 2019, பரப்புரை இன்று வெள்ளிக்கிழமை நல்லூரில் ஆரம்பமானது.இந்த ஆரம்ப நிகழ்வில் ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எழுக தமிழ் நிகழ்வு அடுத்த மாதம் 16 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றதுஇதற்கமைய நல்லூர் கந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன.(15)1 2 3