செய்திகள்

ஐ.தே.க பிரதி தலைவராக ருவான் – ரணில் ஜனவரி வரை தலைவராக இருப்பார்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவாகியுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழு இன்று மாலை கூடிய போது இரகசிய வாக்கெடுப்பில் அவர் தெரிவாகியுள்ளார்.

பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜேவர்தன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் அதுபற்றி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ருவான் விஜேவர்தன 28 வாக்குகளையும், ரவி கருணாநாயக்க 10 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்படி ருவான் விஜேவர்தன வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை ஜனவரி வரையில் ரணில் தொடர்ந்தும் தலைவராக பதவி வகிப்பார். -(3)