செய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு – பிசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது

சாவக்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒருவர் சாதாரண விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.இதனால் சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர் அலுவலகத்துக்குள் உட்செல்ல மருத்துவ அத்தியகட்சகரால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.(15)