செய்திகள்

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுனவை சேர்ந்த பலர் ஐ.தே.கவில் இணைவர் : அகில

எதிர்வரும் எந்தவொரு தேர்தலின் போதும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக்கொள்வார்கள் என அமைச்சர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.
மஹவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் பேச்சுக்களை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)