தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பால் மா விலையை அதிகரிக்க திட்டம்!
விலை சூத்திரத்திற்கமைய பால் மா விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்காமையால் தற்காலிகமாக பால் மா இறக்குமதியை நிறுத்துவதற்கு பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஒவ்வாரு 3 மாதத்திற்கும் ஒரு தடவை பால் மாவின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த மாதத்தில் 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனபோதும் அதற்கு வாழ்க்கைச் செலவு குழு அதற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் தாம் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இதனால் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. -(3)