தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் : (படங்கள்)
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
அரச அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளதுடன் இதனையொட்டி வாக்களிப்பு நடக்கும் இடங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூலம் வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை இந்த தினங்களில் வாக்களிக்க முடியாது போனவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 659,030 பேர் தகுதி பெற்றுள்ளனர். -(3)