தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லை – பூ.பிரசாந்தன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓருபோது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து,மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நடுத்தெருவில் விட்ட கட்சியல்ல.இன்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்புக்காக பாடுபட்டுவரும் கட்சியாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பற்ற விமர்சிப்பதற்கு துளியளவும் அருகதையில்லாத நிலையில் கட்சியை பற்றி விமர்சிக்க அவர் எவ்வாறு முனைந்திருக்கின்றார் என்றால் வடகிழக்கு மாகாணத்தில் தமது அரசியல் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாது,மக்களினால் தொடர்ந்து தூக்கியெறியப்படுகின்ற சூழலில் தங்களின் இருப்பு பறிபோகும் நிலையில் ஒரு அரசியல் யுக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை விமர்சிக்க முனைகின்றனர்.
அவர்களைப்போன்று அரசியல் அதிகாரம் கிடைக்கமுன்னர் ஒருபேச்சும் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர் ஓருபேச்சு,கூட்டமைப்புகுள் ஜனநாயகம் இல்லாத சூழல்போல் எங்களுக்குள் இல்லை.எமது கட்சியில் ஜனநாயகம் உள்ளது.மக்களின் ஆணையை மதித்து தொடர்ந்து மக்களுக்காக பயணிப்போம்.எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் அரசியல் தெளிவூட்டல்களை செய்து அதன்மூலம் இம்முறை அதிகவாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில்பெற்று அதிலும் அதிகூடிய விருப்புவாக்குகளை எங்கள் தலைவர் பெற்றதன் மூலம் கிழக்கின் தலைமைத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
கிழக்கில் தலைமைத்துவங்கள் உருவாக்கப்படக்கூடாது என்பதில் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது என்பதன் வெளிப்பாடாகவே அவரின் கருத்துஉள்ளது.1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்பு ஆயுத ரீதியாக உள்நுழைந்து பின்னர் அரசியல் ரீதியாக மாற்றம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன்,தான் கடந்துவந்த பாதையினையும் திரும்பிப்பார்க்கவேண்டும்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்த அருகதையும் இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)




