செய்திகள்

தென்மராட்சி சரசாலை கிராம மக்களின் முன்மாதிரி

தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு நேற்று இடம்பெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதிமூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்தனர்.

மேலும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.இத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள், அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவில் அறப்பணி சபைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)IMG-37f3c0800bc01656c37ad13857b333e9-V IMG-67de1014cbee58ab9d72c2982c759dbc-V