செய்திகள்

தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வார் என்ற ஊகங்கள்படி, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அவர் திட்டமிட்டுள்ளார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக அவரது கருத்து அமைவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில் தான் தொடர்ந்தும் செயற்படப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.(15)