செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு இல்லை

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்று (10) நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றியே முடிவடைந்துள்ளது.
தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில், தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் முதற் கட்டமாக கலந்துக்கொண்டிருந்தனர்
இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபா அதிகரிப்பதாகவும், ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும், 80.00 ரூபா வரவு கொடுப்பனவும், 30.00 விலைகொடுப்பனவும், மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலே ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
இரண்டாம் கட்டமாக 12.00 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்து இடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர், கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கும் இடையில் நடைபெற்றது. இதன்போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட தீர்மானங்களை முன் வைத்தனர். இதனை பரீசிலித்த தொழிற்சங்கங்களில், தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுபடி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி எழும்பி சென்றனர். -(3)