செய்திகள்

பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரத்தில்

க.பொ.த உயர்தரப் பரீட்சை , 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளை நடத்தும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரத்தில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் கல்வி அமைச்சருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் தொடர்பாக உறுதியான தினத்தை அறிவிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அடுத்த வாரத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் , ஆசிரியர்களிடம் கருத்துக்களை பெற்று இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)