செய்திகள்

பாகிஸ்தானுக்கான விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல்

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான தாக்குதல் நீடிக்கின்றது.இதற்கிடையில் இரு இந்திய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. இதனால் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாக்கிஸ்தானிய வான்வழி பயங்களை பாகிஸ்தான் மூடியுள்ள நிலையில், கராச்சி மற்றும் லாகூருக்கு நாளை செல்லவிருந்த விமானங்களே தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல் வெளியிட்டுள்ளது.(15)