செய்திகள்

பிணை முறி விவகாரம் : பொய் சாட்சியம் வழங்கியதாக ரவி மீது வழக்கு

முன்னாள் நிதியமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியதாக தெரிவித்தே அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை கூறத்தக்கது. -(3)