கிளிநொச்சி புன்னை நீராவிப் பகுதியில் 14-SLNG படைபிரிவின் கட்டுப் பாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே இப்பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில் பதுங்குகுழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பிற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இப்பதுங்கு குழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர். ஆனால் இவ்வருடம் முதல் பார்வையிடுவது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இதனை உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போதும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(15)