செய்திகள்

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின்தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் சம்பந்தன் சந்திப்பு

பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லியின் இலங்கைக்கான உத்தியோக்கபூர்வ பயணத்தின், முதல் சந்திப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.இந்த சந்திப்பில், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.இந்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக, பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(15)