செய்திகள்

போதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன

கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை செயற்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு சட்ட மா அதிபரை கோரவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய நடவடிக்கையெடுக்கவுள்ளோம். இவர்கள் அந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனையை செயற்படுத்த வேண்டுமென சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)