செய்திகள்

மகிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கு சங்கக்கார பதில்

2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதியாலேயே இலங்கை அணி கிண்ணத்தை இழந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துக்கு அப்போதிருந்த இலங்கை அணித்தலைவரான குமார் சங்கக்கார பதிலளித்துள்ளார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு பாரதூரமானது. அப்படி நடந்திருந்தால் அவர் தன்னிடமுள்ள சகல சாட்சிகளையும் ஆதாரங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவுக்கும் வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் எவரும் வெவ்வேறு விடயங்களை சிந்திக்க வேண்டியிருக்காது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதன் ஆழத்திற்கு சென்று செயற்பட முடியும். அதுதான் சிறந்த செயற்பாடு. எனது நினைவுக்குட்பட்ட வகையில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக அவரே இருந்தார் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். -(3)