செய்திகள்

மது போதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது!

நாடு பூராகவும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து குற்றச் செயல்கள் தொடர்பாக 3355 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 249 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. -(3)