செய்திகள்

மழையுடன் கூடிய கால நிலை தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று தினைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தாழ்நில பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. -(3)