செய்திகள்

முல்லைத்தீவில் தபால் மூல மூல வாக்களிப்பில் பெருமளவான அரசு அலுவலர்கள் பங்கேற்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் இன்று தபால் மூல மூல வாக்கெடுப்பு இடம்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.தபால் மூல வாக்களிப்புக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 845 பேர் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற தபால் மூல வாக்கெடுப்பு நிலையங்களில் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் மாவட்ட செயலக ஊழியர்கள் தேர்தல் திணைக்களத்தின் ஊழியர்கள் பொலிசார் தவிர்ந்த ஏனைய அரசு அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது.(15)