செய்திகள்

யாழில் ஆசிரியைகளை இடமாற்றக்கோரி பெற்றோர்கள் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சகோதரிகளான இரு ஆசிரியைகள், பல வருடங்களாக சித்தங்கேணி, பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் எனவும் அவர்களின் கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குறித்த ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக் கோரி சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தாங்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 7.00 மணிமுதல் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவருவதுடன் உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள இப்பாடசாலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)