செய்திகள்

யாழ் தெல்லிப்பளை பகுதியில் பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது

யாழ் தெல்லிப்பளை பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போதே குறித்த பொருட்களை மீட்டு , தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞர் ஒருவர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல் , வாள் ஒன்று , சைக்கிள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)