செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மற்றும் கைதடி சித்த மருத்துவ பீட மாணவிகளுக்கு கொரோனா தொற்று இல்லை

கம்பஹாவில் கொரோனா தொற்று உறுதியான இராணுவ வீரர் ஒருவரின் சகோதரி மற்றும் காய்ச்சல் அறிகுறி காரணமாக பொலனறுவையை சேர்ந்த மாணவி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது இன்று கிடைத்த முடிவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவி மற்றும் யாழ் கைதடி சித்த மருத்துவ பீட மாணவி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு கிடைத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று மாலை சற்றுமுன் தெரிவித்துள்ளார்.(15)