செய்திகள்

ராஜித வீடு திரும்பினார்!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
நேற்று இரவு அவர் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
திடீர் சுகயீனமடைந்த நிலையில் ராஜித சேனாரட்ன கடந்த 26ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் வைத்தியசாலையில் வைத்து கைதாகிய அவர் பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)