லண்டனில் இருந்து 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 278 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கியிருந்த, 278 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பி.சீ.ஆர் அறிக்கை கிடைக்கும் வரை இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 4 ஹோட்டலில் தங்கவைக்க, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(15)




