லண்டன் தாக்குதல் சம்பவம்- மேலும் ஓரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்
லண்டனில் புகையிரதத்திற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் சனிக்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பயங்கரவாத குற்றங்கள் குறித்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர் தற்போது லண்டனில் காவல்நிலையமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
புகையிரத தாக்குதலை தனியொரு நபர் மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என உள்துறை அமைச்சர் அம்பெர் ரூட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.