செய்திகள்

வடக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின் மீன் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்கும் வகையிலான எந்தவகையான தீர்மானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்குகளை வழங்குவற்காக சுமார் 60 மில்லியன் ரூபாய் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கப்பட்டமைக்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மகிழ்ச்சி வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர், வடக்கின் ஏனைய மாவட்ட விவசாயிகளும் குறித்த நன்மையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் – பின்னரும் இடம்பெற்ற அமைச்சரவையில்> வடக்கு மாகாண விவசாயிகள் சுமார் 200 ஹொக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கைக்கு தயாராக இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான விதை உருளைக் கிழங்குகளை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் வடக்கு மாகாண உருளைக் கிழங்கு பயிர்செய்கையாளர்கள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.(15)