செய்திகள்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்பினை பேணிய 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல்

வடமராட்சி கிழக்கு – குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 09 பேருக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்பினை பேணிய 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் குறித்த 9 பேருடன் தொடர்பில் இருந்த வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 70 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம் குறித்த 9 பேருடன் மொத்தமாக 69 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.(15)