செய்திகள்

வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி வீதியோரத்தில் இருந்து மீட்பு

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியோரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று நெளுக்குளம் பொலிசாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் நேற்று (25.04) தமிழ், சிங்கள புதுவருட நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இரவு நிகழ்வுக்கு வருகை தந்த ஒருவருடைய முச்சக்கர வண்டியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது. இவ்வாறு காணாமல் போயிருந்த முச்சக்கர வண்டி மன்னார் வீதியில் பம்பைமடு பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இக் கடத்தில் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_5529

N5