செய்திகள்

வாக்களிப்பதற்காக ஊர்களுக்கு செல்ல விசேட பஸ் சேவைகள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து ஊர்களுக்கு செல்லவுள்ளோருக்கா விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன நடவடிக்கையெடுத்துள்ளன.
இதன்படி இன்று முதல் கொழும்பு , கண்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து தூர பிரதேசங்களுக்கு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தூர இடங்களிலிருந்து கொழும்பு திரும்புவோருக்காகவும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. -(3)