செய்திகள்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ரயில்வே சங்கங்கள் தீர்மானம்

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
சம்பள விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ரயிவே தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தன.
இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு அந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)