செய்திகள்

20 ஐ ஆராய்ந்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கென அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட விசேட குழுவின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உதய கம்மன்பில , அலி சப்ரி , நிமல் சிறிபால டி சில்வா , விமல் வீரவன்ச , சுசில் பிரேமஜயந்த , வியாழேந்திரன் , டிலான் பெரேரா , பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் பிரதமரால் நியமிக்கப்பட்டது.
அந்த குழுவினர் இன்றைய தினத்தில் பிரதமரிடம் தமது ஆய்வு அறிக்கையை சமர்பித்துள்ளனர். -(3)