துப்பாக்கியுடன் வநத இராணுவ வீரர்: மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவு பிரதானியிடம் விசாரணை
அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவை துப்பாக்கியுடன் நெருங்கிய இராணுவ வீரர் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு பிரதானி கொல்மஹேந்திர பெர்னாண்டோவிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கோப்ரல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத் திருந்தார். இந்நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கொல் மஹேந்திர பெனாண்டோ விசாரிக்கப்பட்டுள்ளார்.