பெட்ரொல் கப்பல் ஜுலை 21 ஆம் திகதி வரையில் நிச்சயமில்லை!
பெட்ரோல் கப்பல் ஜுலை 21 ஆம் திகதியே வரும் என்று பிரதமர் அலுவலக பிரதானியான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஊடக பிரதானிகளுடான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை டீசல் கப்பல் 10 – 15 ஆம் திகதிகளுக்கு இடையில் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது குறைந்தளவான டீசல், பெட்ரோலே கையிருப்பில் இருப்பதால் அவை அத்தியாவிய சேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
-(3)