செய்திகள்
மார்ச் 9 உள்ளூராட்சித் தேர்தல்!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான தினத்தை அறிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
-(3)