செய்திகள்

அகவணக்கம்

தாயுள்ளம் நொந்து அழ
தந்தை மனம் வெந்து கொள்ள
தந்த   உயிர்கொடைக்கு
தரும் கடன் எமக்கிருக்க
வந்து சொல்லிப் போனார்கள்
பந்தத்தை ஏற்றிவைத்து
சொந்தத்தை நினைத்தழுதல்
இந்த நிலத்தில் கூடாதென!

எந்த இடத்தில் எங்கள் நிலத்தில் ;
குந்தியிருந்து தங்கு தடைபோட்டாலும்
வந்த படை விந்தை கொண்டு வாய் பிளக்க
வான் பொழியும் ! செங்காந்தள் தான் மலரும் !
நிலவெறித்து பொதுச்சுடராய் நின்றொளிரும்!
வணங்கிக் கொள்வோம் மனதிலே மாவீரர்களை !
வரும் தலைமுறையும்  அவர்களை வணக்கச் செய்வோம்!

கொற்றவை