அசுத்தமான நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் கருவி : இலங்கையில் அறிமுகம்
சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நீர் சுத்திகரிப்பு கருவியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இந்த கருவி மூலம் எந்தவொரு நீர் நிலைகளிலிருந்தும் (அசுத்தமான நீர் நிலையாக இருந்தாலும்) நீரை பெற்று உடனடியாக அதனை சுத்தமான குடிநீராக மாற்ற முடியுமெனவும் இந்த கருவி சுகாதார தரம் வாய்ந்ததெனவும் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக இன்று கொழும்பில் ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு அந்த கருவி செயற்படுத்தும் முறையும் காண்பிற்கப்பட்டது. -(3)





