`அஞ்சாதே’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே’ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள `பவர்பாண்டி’ வருகிற ஏப்ரல் 14-ல் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக அவர் நடித்து வரும் மற்ற படங்களின் கதைகளையும் தேர்வு செய்தே நடித்து வருகிறார். அவர் தற்போது `நிபுணன்’, `துப்பறிவாளன்’, `திருட்டு பயலே 2′ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.




