செய்திகள்

அனைத்துலக மனித உரிமைகள் நாள் : “RIGHT TO LIFE” லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் !!

டிசம்பர் 10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினை மையப்படுத்தி லண்டனில் “RIGHT TO LIFE” எனும் தொனிப்பொருளிலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறுகின்ற இக்கவனயீர்ப்பு போராட்டம், பிரித்தானிய பிரதமர் வாயில் தளத்தில் இடம்பெறுகின்றது.
டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுத்து ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்திற்கு வலுச்சேர்குமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
N5