அரசாங்கம் மீதான மக்களின் திருப்தி இரட்டிப்பாக அதிகரிப்பாம்
Verité Research நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை 10 வீதமாகவே காணப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் தற்போதைய நிலை குறித்த திருப்தி அதிகரித்துள்ளதாக Verité Research நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில் முறையே 4% ,7% ஆக காணப்பட்ட அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை மதிப்பீடு 2023 ஜூன் மாதத்தில் 21% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதத்தில் அதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெறுபேறு -43.8 ஆக இருந்தது.
இது 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபரை விடவும் அதிகமாகும்.
நாட்டின் பொருளாதாரம் குறித்த மக்களின் நம்பிக்கையை மதிப்பிடுவதற்கு பல்வேறு கேள்விகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் -100 முதல் +100 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக Verité Research நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
-(3)




