அரசியலமைப்பை மாற்றினால் மட்டும் நல்லிணக்கம் வராது : சந்திரிக்கா
அரசியலமைப்பு மாற்றத்தினால் மாத்திரம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய சட்ட மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை மாற்றுவதினூடாக மட்டும் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை இல்லாது செய்ய முடியாது. அமைதி மற்றும் நல்லிணகத்திற்காக செயற்படுவதினூடாக மாத்திரமே அதனை வெற்றிக்கொள்ள முடியும். என தெரிவித்துள்ளார். -(3)




